Sunday, June 24, 2007

இயற்கையின் கணக்கு





மண் + மரம் = மழை , சோலைவனம் .
மண் - மரம் = - மழை , பாலைவனம்.
மழை - மரம் = வெள்ளம் , மண் அரிப்பு.



தேசீய வன கொள்கை 1988 படி நாம் 33% வனப்பரப்பளவு வைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது தேசீய அளவில் சுமார் 22.6% வனப்பரப்பளவும், தமிழகத்தை பொறுத்த வரையில் சுமார் 17.6% வனப்பரப்பளவு மட்டுமே வைத்திருக்கிறோம். தமிழகத்தை பொறுத்த வரையில் மழை அளவு சுமார் 900mm. இது தேசீய மழை அளவை விட சுமார் 350mm குறைவு. அப்படி இருக்கும் போது நாம் நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை பல காரணங்களுக்காக பயிர் செய்து பின் மழை அளவுகுறையும் போது கஷ்டப்படுகிறோம். மூன்று அண்டை மாநிலங்களுடனும் நீருக்காக போராடுகிறோம். மரமும் மழையும் ஒன்றுக்கொன்று தொடர்புடயது.


தமிழக வனத்துறை ஒரு சிறந்த திட்டத்தை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி வனங்களுக்கு வெளியே விவசாய்களின் நிலத்தில் லாபம் தரும் மரங்களை வளர்க்க உதவப்போகிறார்கள். விபரங்களை அறிய தமிழக வனத்துறையின் வலைதளம் http://www.forests.tn.nic.in/ அல்லது அருகிலுள்ள தமிழக வனத்துறை அலுவலங்களை அணுகி விபரங்களைப் பெற்று இலக்கான 33% வனப்பரப்பளவு விரைவில் அடைவோம்.

No comments: