Thursday, December 6, 2007

தமிழகத்தில் பேரீட்சை மரம்!!!!!!!

பன்னாட்டு நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் வறட்சியை தாங்கி வளரும் பயிருக்கு மரபணு மாற்றம் (வறட்சியை தாங்க), மாற்றுப்பயிர் (உ.த. காட்டாமணக்கு ) என கோடிகளில் செலவு செய்து விவசாயிகளை மேலும்
குழப்பத்திலும், நஷ்டத்திலும் வாழ வைத்து, அவர்கள் தற்கொலையை (பார்க்க The Hindu Dt 12-15 Nov 2007 ) நோக்கி போய்கொண்டிருக்கும் வேளையில் வறட்சியை தாங்கி, செலவும் பராமரிப்பும் குறைந்த, அதிக லாபம் தரும்
ஒரு நீண்ட கால மாற்றுப் பயிரை அறிமுகப்படுத்தி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ஒரு விவசாய அமைதி புரட்சியை செய்து கொண்டிருப்பவர் தருமபுரி விவசாயி திரு.S.நிஜாமுதீன்.



திரை கடலோடி திரவியம் தேடி கூடவே ஒரு மாற்றுப்பயிரையும் கண்டு அதனை தன் நிலத்திலேயே நட்டு சோதனை செய்து வெற்றியடைந்த பின் அறிமுகம் செய்து இன்று சுமார் 2000 ஏக்கர் தமிழகத்திலும் சுமார் 700
ஏக்கர் அண்டை மாநிலங்களிலும் விரும்பி பயிரிடப்படுகின்றது என்பது திரு.S.நிஜாமுதீன் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

கீழ்கண்ட நன்மைகள் இதைப் பயிரிடுவதால் கிடைக்கின்றது.

1. குறைந்த நீர்.

2. பராமரிப்பு செலவு குறைவு.

3. ஆடு,மாடுகள் சேதப்படுத்துவதில்லை.

4. களர் நிலத்திலும் வளர்கிறது.

5. நீண்ட நாட்கள் பழங்களைப் பதப்படுத்தி பாதுகாக்கலாம்.

6. நீண்ட காலப்பயிர் 5-100 ஆண்டுகள் வரை.

7. நல்ல மகசூல் சுமார் 100 - 300 கிலோ/ஆண்டு.

8. விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்கின்றது.

9. சிறந்த சத்துள்ள (இரும்புச்சத்து) பழம்.

10. தரிசு நிலம் மேம்படுவதோடு வேலை வாய்ப்பும் பெருகுகின்றது.

11. முக்கியமாக அந்நிய செலவாணி மிச்சப்படுகிறது.


உலகிலயே பேரீட்சையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான்.

==============================================
ஆண்டு ------ இறக்குமதி----------மதிப்பு.

----------------------மெ.டன்---------அமெ.டாலர்(,000)

==============================================

1998 -------------244088 -----------------54591

1999 -------------238195 -----------------45798

2000 ------------192619 ------------------41554

2001 ------------244367 ------------------52786

2002 ------------171523 ------------------27798

2003-------------193755-------------------33011

2004-------------247875-------------------46407

=============================================
Source : FAO/UN



இறக்குமதியை குறைத்தாலே அந்நிய செலவாணி மிச்சப்படுகிறது. எனவே தமிழக அரசும், மத்திய அரசும் தங்கள திட்டங்களில் இதனை அறிமுகம் செய்தால் அடுத்த 10-20 ஆண்டுகளில் நிறைய அந்நிய செலவாணியை மிச்சபடுத்தமுடிவதோடு நிலத்தின் பயன்பாட்டையும் அதிகரிக்கமுடியும்.மிகச் சிறந்த ஒரு மாற்றுப்பயிரை நமக்கு அறிமுகம் செய்த திரு.S.நிஜாமுதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தொடர்புக்கும் விளக்கங்களுக்கும்
கீழ் கண்ட வலைதளத்தைக் காணுங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



WHERE THERE IS A WILL THERE IS A WAY.

2 comments:

வடுவூர் குமார் said...

தருமபுரியில் இளவயது கல்யாண பிரச்சனை என்று தொலைக்காட்சியில் பார்த்த போது நொந்த மனது இப்போது கொஞ்சம் ஆறுதல் அடைந்தது.
பகிர்ந்தமைக்கு நன்றி.

வின்சென்ட். said...

திரு.வடுவூர் குமார்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. எனது பார்வையில் தருமபுரியில் நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.துல்லிய வேளாண்மை, பேரீட்சை விவசாயம், கிருஷ்ணகிரி பகுதிகளில் மலர் சாகுபடி என்பன போன்றவை. Necessity is the Mother of Invention.