Saturday, March 29, 2008

புவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு (Earth Hour)

The logo for Earth Hour

புவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த World Wide Fund for Nature-Australia (WWF)வும், சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையும் இணைந்து சென்ற வருடம் மார்சு 31 ஆம் தேதியன்று சிட்னி மாநகரில் மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை 1 மணி நேரம் மின்சாரம் உபயோகிக்காமல் தவிர்த்தனர். சுமார் 2.2 மில்லியன் மக்கள் தவிர்த்ததாக கணக்கிட்டனர். உடனே அது மற்ற நாடுகளையும் கவர்ந்தது. எனவே இந்த ஆண்டு (2008 ) நிறைய நாடுகளில், நகரங்களில் இதனை இன்று 29-03-2008 இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை மின் உபயோகத்தை தவிர்க்கவுள்ளனர். இதில் டில்லி மாநகரும் உண்டு. வலைப்பதிவர்கள் எங்கிருந்தாலும் சிரமம் பார்க்காமல்இன்று மின் உபயோகத்தை இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

Thursday, March 27, 2008

மரங்களைப் பற்றிய புகழ் மிக்க வாசகங்கள்

If you are thinking a year ahead, sow a seed. If you are thinking ten years ahead, plant a tree."
Chinese poet, 500 BC

"He who plants a tree loves others beside himself."

English proverb

"The best friend on Earth of man is the tree. When we use the tree respectfully and economically,we have one of the greatest resources of the Earth.

"Frank Lloyd Wrigh

"They are beautiful in their peace; they are wise in their silence. They will stand after we are dust.They teach us, and we tend them."

Galeain ip Altiem MacDunelmor

"Though a tree grows so high, the falling leaves return to the root.

"Malay proverb

"A society grows great when old men plant trees whose shade they know they shall never sit in.

"Greek proverb

"Even if I knew that tomorrow the world would go to pieces, I would still plant my apple tree.

"Martin Luther

"The great French Marshall Lyautey once asked his gardener to plant a tree. The gardener objected that the tree was slow growing and would not reach maturity for 100 years. The Marshall replied, 'In that case, there is no time to lose; plant it this afternoon!'"

John F. Kennedy

"Trees are poems that Earth writes upon the sky. We fell them down and turn them into paper, that we may record our emptiness.

"Kahlil Gibran
"If what I say resonates with you, it is merely because we are both branches on the same tree.

"W. B. Yeats

"A tree is our most intimate contact with nature.

"George Nakashima, woodworker

"A tree uses what comes its way to nurture itself. By sinking its roots deeply into the earth, by accepting the rain that flows towards it, by reaching out to the sun, the tree perfects its character and becomes great. ... Absorb, absorb, absorb. That is the secret of the tree.

"Deng Ming-Dao, Everyday Tao

"Plant trees. They give us two of the most crucial elements for our survival: oxygen and books.

"A. Whitney Brown

"Each generation takes the Earth as trustees. We ought to bequeath to posterity as many forests andorchards as we have exhausted and consumed.

"J. Sterling Morton

"To me, nature is sacred; trees are my temples and forests are my cathedrals.

"Mikhail Gorbachev

"God has cared for these trees, saved them from drought, disease, avalanches, and a thousand tempests and floods. But he cannot save them from fools.

"John Muir

"The forest is a peculiar organism of unlimited kindness and benevolence that makes no demands for its sustenance and extends generously the products of its life and activity; it affords protection to all beings.

"Buddhist Sutra

"People who will not sustain trees will soon live in a world which cannot sustain people.

"Bryce Nelson

"Reforesting the earth is possible, given a human touch.

"Sandra Postel and Lori Heise, Worldwatch Institute

ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும்

Saturday, March 22, 2008

உலக நீர் நாள் மார்ச் 22 ஆம் நாள்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. --திருக்குறள் --


அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். --பைபிள் சங்கீதம் /33/7
ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே நீரைப் பற்றி அதன் மறைமுக சிறப்பு பற்றி வள்ளுவர் மிக தெளிவாகக் கூறிவிட்டார். உண்மையான சொத்து (பொக்கிஷம்) துருவப் பனியும் நிலத்தடி நீரும் தான் என பைபிள் கூறுகிறது. ஆனால் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம் என்பது உண்மை. (உ.தா) தமிழகம் அண்டை மாநில உறவு. தற்கால புவி வெப்பம் குறித்து IPCC (Intergovernmental Panel on Climate Change) துருவபகுதிகளை காப்பாற்ற எடுத்து வரும் நடவடிக்கைகள்.
ஆற்றங்கரை அருகேதான் நாகரீகம் தோன்றியது என்பது வரலாறு. பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னிருந்த 'மொகஞ்சாதரோ' வின் Great Bath நம் முன்னோர்கள் நீரை எவ்வாறு உபயோகித்தார்கள் நமக்கு தெரிவிக்கிறது.

Great Bath, Mohenjodaro

சில செய்திகள்.

1) ஐக்கிய நாடுகள் சபை தண்ணீருக்கு முக்கியத்துவம் தந்து பத்தாண்டு கால வாழ்வதற்காக நீர் என்று 22 மார்சு 2005 முதல் 2015 வரை கொண்டாடிக் கொண்டிருக்கிறாம்.
The 'Water for Life' Decade was launched on 22nd March 2005 by the United Nations Secretary-General Kofi Annan with the following video message: ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும்
Dear friends,
Water is essential for life. Yet many millions of people around the world face water shortages. Many millions of children die every year from water-borne diseases. And drought regularly afflicts some of the world’s poorest countries. The world needs to respond much better. We need to increase water efficiency, especially in agriculture. We need to free women and girls from the daily chore of hauling water, often over great distances. We must involve them in decision-making on water management. We need to make sanitation a priority. This is where progress is lagging most. And we must show that water resources need not be a source of conflict. Instead, they can be a catalyst for cooperation. Significant gains have been made. But a major effort is still required. That is why this year marks the beginning of the “Water for Life” Decade. Our goal is to meet the internationally agreed targets for water and sanitation by 2015, and to build the foundation for further progress in the years beyond. This is an urgent matter of human development, and human dignity. Together, we can provide safe, clean water to all the world’s people. The world’s water resources are our lifeline for survival, and for sustainable development in the 21st century. Together, we must manage them better.
Kofi A. Annan

2) "மித்ரடாம்" (Mithradham Renewable Energy Centre) எர்ணாகுளம் என்ற இடத்திற்கு சொன்றபோது நுண்ணோக்கி முலம் பெரிதாக்கப்பட்ட இரு படங்களைப் பார்த்ததேன்.
நீர்த்துளி ஒருவர் உணர்ச்சிவசப்படும் முன்னும் பின்னும்
நான்கு வெவ்வேறு ஆட்களின் கைகளிலிருந்து


அடுத்து உலகப்போர் வருவதாக இருந்தால் அது தண்ணீருக்காகத் தான் என அறிஞர்கள் கூறுகிறார்கள். இனியாவது கிடைக்கின்ற நீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துவோம்.

Friday, March 21, 2008

உலக வனநாள்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும்
உடைய தரண். -திருக்குறள்


காடு இல்லை என்றால் நாடு இல்லை.

வனம் அழிந்தால் தனம் அழியும்.
அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.
திரு.மாசானபு புகோகா.
தலை சிறந்த ஜப்பானிய இயற்கை ஞானி

Saturday, March 15, 2008

பசுமை விகடனில் " வெட்டி வேர்"

பசுமை விகடன் இம்மாத முதல் இதழில் வெட்டி வேருக்கென 6 பக்கங்களை சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. கட்டுரையின் சிறப்பம்சமும் முக்கியமானதும் சென்னை மாநகர மேயர் திரு.மா.சுப்பிரமணியன் வெட்டி வேரை குறித்து அறிந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக பரிட்சார்த்த முறையில் கூவத்தை சுத்தப்படுத்த வெட்டி வேரை பயன்படுத்தலாம் என்று கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே போன்று திருப்பூர்,கரூர் சாயப்பட்டறை குறித்து பாரதியார் பல்கலை கழகத்தின் பேராசிரியர். லட்சுமண பெருமாள்சாமி அவர்கள் கூறியதையும் அட்டைப் படத்தில் நீண்ட வெட்டி வேருடன் அவர்கள் இருப்பதையும் காணலாம். " வெட்டி வேரை" சிறந்த முறையில் (மறு)அறிமுகம் செய்த பசுமை விகடனுக்கு எனது வாழ்த்துகள். சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய இதழ்.

Monday, March 10, 2008

கேரள மாநில விவசாய கண்காட்சியில் பார்த்தவை.

சென்ற மாத இறுதியில் எர்ணாகுளம் நகரில் நடந்த விவசாய கண்காட்சியில் பார்த்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நேர்த்தியாக வகைபடுத்தி காட்சிக்கு வைத்தது மிகச்சிறப்பாக இருந்தது.

சேனைக் கிழங்கு (பெரியது) சுமார் 62 கிலோ எடை என்றார்கள்.

1 அடிக்கு மேல் காய்க்கும் தட்டைக் காய்

பப்பாளி

ஆர்கிட் மலர்கள் பல வண்ண யுபோர்பிய மலர்கள்



போட்டிக்கான எனது புகைபடங்கள்




உதகைக்கு மிக அருகிலிருந்தாலும் மக்கள் அதிகம் நடமாடாத பகுதி.

Friday, March 7, 2008

வன உயிர்களின் நகர் வலம்

பொருளாதார மாற்றம் கிராம மக்களை நகரம் நோக்கி வர வைத்தால் ,சுற்றுச்சுழல் மாற்றம் வன உயிர்களை நகரம் நோக்கி வர வைத்துள்ளது என்பதும் உண்மை தானோ? கடந்த இரு மாதங்களாக கோவை மாவட்ட வன துறையினர் அரும்பாடு பட்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து சுமார் 20 கி.மீ தூரம் பயணம் செய்து சூலூர் வரை நகர் வலம் வந்த யானைகளை கஷ்டப்பட்டு திருப்பி அனுப்பினர்.

தற்சமயம் எங்கள் குடியிருப்புப் பகுதிகளில் அழகிய பறவையினங்களும், நமது தேசீயப் பறவையான மயில் கூட்டமும் (குறைந்தது 10 ) வலம் வருகிறது. புறநகர் பகுதிகளில் கட்டிட வேலைகள் தீவிரமாக நடைபெறுவதும் ,அவினாசி சாலையிலிருந்த சுமார் 1068 மரங்கள் சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்டதும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. சென்ற வாரம் எங்கள் வீட்டிற்கு வந்த அந்த விருந்தினர் இருவரை வெகு அருகிலிருந்து படம் எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உணவிற்காகவும், நீருக்காகவும் அவைகள் தரையிரங்காமல் வீட்டிற்கு மேல் பறப்பது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.


இருவாரங்களுக்கு முன் 3 யானைகள் இரயிலில் அடிபட்டு இறந்துபோயின. ஆழியார் அணைபகுதியில் நீர் அருந்த வந்த யாணை ஒன்று தவறி விழுந்து இறந்ததாக நாளிதழில் படித்தேன். நாம் சற்று முனைப்புடன் செயல்பட்டு அடுத்து வரும் தலைமுறையினருக்கு இவைகளை விட்டுச் செல்வது நண்பர்களே!! நமது கடமை. எனவே இவைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் வாழ்வாதாரம் தேவை. அதற்கு தாவரங்கள் தேவை. சிந்திப்போம்!! செயல்படுவோம். மரம் நடுவோம், வளம் பெறுவோம்.

Thursday, March 6, 2008

சீனாவில் வெட்டிவேர்

சீனாவின் Prof. Liyu Xu அவர்கள் சீனாவில் வெட்டிவேர் 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப் படுத்தப்பட்டு எவ்வாறு அவர்கள் அதனை பயன்படுத்தி வெற்றிகரமாக சாலை, இரயில்பாதை, ஆற்றங்கரையோரம், கடலோரம் ஆகியவற்றை ஸ்திரபடுத்தி பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளனர் என்பதை விளக்கினார்.

முடிந்தவுடன் கேரளாவின் "குட்டநாடு" பகுதி விவசாயி ஒருவர் மகிழ்ச்சியில் தங்கள் பகுதி விவசாயப் பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததாக கூறினார். அடுத்த நாள் இந்திய வெட்டிவேர் அமைப்பை தங்கள் பகுதியில் வந்து வெட்டிவேரை அறிமுகம் செய்யும் படி கேட்டுக் கொண்டார். இது வெட்டிவேருக்கும், Prof. Liyu Xu அவர்களுக்கும் கிடைத்த பெரும் வெற்றியென்றால் அது மிகையில்லை.

குட்டநாடு புகைபடம் உதவி :வலைதளம்
குட்டநாடு பகுதி உலகின் ஆபூர்வமான ஆனால் வித்தியாசமான விவசாயப் பிரச்னையுள்ள பகுதி.கடல் மட்டத்திற்கு கீழ் சுமார் 6 அடி வரை தாழ்வான பகுதி.கேரள மாநிலத்தின் நெற்களஞ்சியம். பொதுவாக நாம் நீரை இறைத்து வயல்களுக்குப் பாய்ச்சி நெல் பயிர் செய்வோம் ஆனால் அவர்கள் வயல்களிலுள்ள அதிக நீரை இறைத்து வெளியேற்றி நெல் பயிர் செய்கிறார்கள். அதிக நீர், கடல் நீர் உள் நோக்கி பாய்தல் என பிரச்னை இருப்பதால் கரைகள் பலவீனப்பட்டு உடைந்து அங்கு விவசாயப் பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. வெட்டிவேர் உப்பு நீரையும் தாங்கி நன்கு வளர்வதால் கரைகள் பலப்பட்டு விவசாயப் பிரச்னை தீரும் என்பது அவரது மகிழ்ச்சிக்குக் காரணம்.
சீனாவில் வெட்டிவேர் அமைப்பு ரீதியாக என்ன செய்திருக்கிறார்கள் என்று சிலவற்றைப் பார்ப்போம்.
1. 3 வது உலக வெட்டிவேர் மாநாட்டை குவாங்ச்சு நகரில் 2003 ஆண்டு நடத்தியுள்ளனர்.
2. முதலாவது உலக வெட்டிவேர் கைவினைப் பொருட்கள் பயிற்சிப்பட்டறையை நடத்தியுள்ளனர்.
3. 3 மாகாணங்கள் அதிகாரப்பூர்வமாக சாலைப் பராமரிப்புக்கு "வெட்டிவேர்" சிறந்தது என ஏற்று பரிந்துரை செய்துள்ளனர்.
4. 2004 ஆண்டு வரை ஜியாங்ஸி மாகாணம் 2,00,000 ச.மீ பரப்பும், கிஜியாங் மாகாணம் 6,00,000 ச.மீ பரப்பும் சாலை பராமரிப்புக்கு வெட்டிவேரைப் பயன்படுத்தியுள்ளனர்.
5. 2003 ஆம் ஆண்டு சீன தேசீய இரயில்வே அமைப்பு இரயில் பாதை பராமரிப்புக்கு வெட்டிவேர் சிறந்தது என அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
6. வெட்டிவேர் பற்றிய "நீயூஸ் லெட்டரை" சீன மொழியில் வெளியிடுகிறார்கள்.

.

Monday, March 3, 2008

தா(வரம்) ஒன்று பயன்கள் பல.

வெட்டி வேரின் பயன்கள்
1. மண் அரிப்பைத் தடுக்கிறது.
2. மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது.
3. நிலத்தடி நீர் உயர உதவுகிறது.
4. மண் வளம் பாதுகாக்கிறது.
5. இலை மூட்டாக்கு இட பயன்படுகிறது
6. கால்நடை தீவனமாகப் பயன்படுகிறது.
7. பூச்சி , களை நிர்வாகத்தில் பயன்படுகிறது.
8. காளான் வளர்ப்பில் பயன்படுகிறது.
9. எண்ணை எடுக்கப்பயன்படுகிறது.
10. கைவினைப் பொருட்கள் செய்யப்பயன்படுகிறது.
11. உயர்அழுத்தப் பலகை செய்யலாம்.
12. எரிபொருளாக பயன்படுகிறது.
13. கரிமம் நிலைப்படுத்துவதில் பயன்படுகிறது.
14. கழிவு நீரை சுத்தம் செய்யப் பயன்படுகிறது.
15. நிலத்தை (Landscape) அழகு படுத்த உதவுகிறது.
16. கூரை வேயப்பயன்படுகிறது.
17. சாலை மற்றும் இரயில் பாதை பராமரிப்பில் உதவுகிறது.
18. ஏரி மற்றும் குளக்கரைகளை ஸ்திரப்படுத்துகிறது.
19. ஏரி மற்றும் குளங்களை சுத்தம் செய்ய உதவுகிறது.
20. பாலை வனங்களில் மேலும் மணல் பரவாமல் தடுக்கிறது.