Thursday, July 3, 2008

மரமும் மழையும்.

இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் ஆப்ரிக்காவில் காங்கோ நாட்டு கிராமம் ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை பார்த்ததும் மனதில் ஒரு மகிழ்ச்சி. மிக எளிமையாக வீடுகள் இருந்தாலும் அவர்கள் இயற்கைக்கு அளித்துள்ள முக்கியத்துவம் பாராட்டப்பட வேண்டும். அனைத்து வீடுகளுக்கு முன்பும் நிழல் தரும் மரம். மரத்தடியில் இளைப்பாரும் குடும்பம். மாதம் மும்மாரி பெய்யாமல் விடுமா? என்ன? கண்ணிற்கெட்டிய தூரம் பசுமை.ஆப்ரிக்காவின் டாக்டர். வாங்கரி மாத்தாய் நோபல் பரிசு வாங்குவதற்கு மரமும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை. ஆனால் அதே ஆப்ரிக்காவில் சோமாலியா#, எத்தியோப்பியா* போன்ற நாடுகளில் மரத்தை அதிகம் வெட்டியதின் காரணமாக பஞ்சமும் பட்டினிச் சாவும் நடைபெறுவதும் அங்குதான்.

கேரளா சென்றுவிட்டு வந்தால் “எவ்வளவு பசுமையாக உள்ளது அந்த ஊர்கள்” என அங்கலாய்க்கும் உதட்டளவு மனிதர்கள் வந்த ஒரு வாரத்தில் குப்பை விழுகிறது, ,வேர் வீட்டிற்குள் வந்துவிடும், வீட்டின் அழகு மறைக்கப் படுகிறது, வாங்கிய புது கார் வீட்டிற்குள் வர தடையாக உள்ளது, வீட்டிற்கு நிழல் அடித்துவிடுகிறது என ஏதேனும் ஒரு காரணம் கூறி நன்கு வளர்ந்த மரத்தை வெட்டத் துடிப்பதை நினைத்தால் மகிழ்ச்சி போய்விடுகிறது. என்று மரத்தின் பயனை புரிந்து கொள்வார்களோ ? தெரியவில்லை. தென்மேற்கு பருவ மழை துவங்கி 30 நாட்கள் முடிந்தும் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய அளவு மழை கிடைக்கவில்லை. வருடம் மும்மாரி பெய்தாலே அதிகம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். தமிழகத்தின் வனப்பரப்பு 17.5% இருக்க வேண்டிய அளவு 33%. சிந்திப்போம், செயல்படுவோம், மழை பெறுவோம்.

மரங்கள் இல்லையேல் மனிதன் இல்லை.
மனிதன் இல்லையேல் மரங்கள் உண்டு.


*Due to demands for fuel, construction and fencing, at least 77% of the country's tree cover has been cut down in the last 25 years. These have been replaced by plantations of eucalyptus which are soil-depleting.(Source: Lonely Planet Guide)
#It is reported that about 92% of domestic energy requirements in Somalia are dependant upon wood and charcoal fuel source. The impact of the overcutting of desired species for the production of charcoal and harvest of fuelwood has become a very serious issue.
Photos :1. Mrs. Suganya 2. Net

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மேலே உள்ள படம் மிக அழகு..

வின்சென்ட். said...

திருமதி.கயல்விழி முத்துலெட்சுமி

உங்கள் வருகைக்கு நன்றி.உங்கள் பாராட்டு திருமதி.சுகன்யா அவர்களை சேரும்.