Saturday, January 31, 2009

ஈரியோபைட் தாக்கிய தென்னங்காய்களை எளிதாக வெட்டும் கருவி..

பொதுவாக ஈரியோபைட் (Eriophyte mite )தாக்கிய தென்னங்காய்களில் மட்டை எடுப்பதென்பது சற்று கடினமே. எனவே மட்டை எடுப்பவர்கள் இதனை தவிர்க்க முயல்வர் அல்லது அதிக கூலி கேட்பார்கள் இல்லையேல் யாருக்கும் உதவாமல் வீணாகும். விவசாயிகளுக்கு இதில் மேலும் நஷ்டம். நல்ல காய்களை மட்டை எடுக்க ஒரு காய்க்கு 40 பைசா வரை செலவு ஆகின்றது. அவ்வாறு அதிக கூலியின்றி 1 மணி நேரத்தில் இரு நபர்கள் சுமார் 500 - 600 காய்களை 10 பைசா (ஒரு காய்க்கு) செலவில் மிக எளிதாக (சிறுவர்,பெண்கள் கூட இயக்கலாம் என்பது இதன் சிறப்பு) வெட்டும் கருவியொன்றை கண்டுபிடித்து உபயோகித்து சாதனை செய்து கொண்டிருப்பவர் திரு.சுப்பையன்.
இவரது பதப்படுத்தப்பட்ட குதிரைமசால் என்ற தீவனம் சென்னை,பெங்களூரூ, புனே,கொடைக்கானல் மற்றும் உதகை,குன்னூர் போன்ற நகரங்களில் வளர்க்கப்படும் குதிரைகளுக்கு உணவாக விரும்பி வாங்கப்படுகிறது. வேலையின் மதிப்பை உணர்ந்த இவரிடம் வேலை செய்யும் மணியளவைப் பொறுத்து வேலையாட்கள் கூலி பெறலாம் என்பது ஆச்சரியமான நடைமுறை உண்மை. மிகத் துல்லியமாக பயிர்களின் வரவு செலவுகளை கணக்கிடும் இவரிடம் நாம் மனித வள நிர்வாகம், நிதி நிர்வாகம், சந்தை நிர்வாகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கருவிகள் கண்டுபிடிப்பு என நிறைய தெரிந்து கொள்ளலாம்.

தொடர்பிற்கு :-
திரு.R. சுப்பையன்
கணக்கன் தோட்டம்
அத்தப்பகவுண்டன் புதூர் (அஞ்சல்)
இருகூர் (வழி)
கோவை.

தொலைபேசி : 0422-2627072
அலைபேசி : 93600 27072

No comments: