Thursday, September 17, 2009

பசுமை புரட்சியின் தந்தை திரு. நார்மன் போர்லாக்

பசுமை புரட்சியின் தந்தை என்று உலகம் முழுவதும் அறியப்பட்ட திரு. நார்மன் போர்லாக் தனது 95 வயதில் 12-09-09 அன்று காலமானர். அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலியை இவ்வலைப் பூ செலுத்துகிறது.

வறட்சியை தாங்கி அதிக மகசூல் தரும் கோதுமை வகையை உருவாக்கி கோடிக் கணக்கான மக்களின் பசியை போக்கியதால் இவருக்கு 1970 ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. மற்ற அறிவியல் துறைகளுக்கு நோபல் பரிசு கொடுக்கப்படுவது வழக்கம் அதில் ஒரு வேளாண்மை விஞ்ஞானிக்கு கிடைத்தது ஆபூர்வம்.

பசியும் அமைதியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. பசி ,பட்டினி, பஞ்சம் என்று வரும்போது திருட்டு,வன்முறை,கொள்ளை போன்றவற்றை தவிர்க்க முடியாததால் அமைதியின்மை தோன்றுகிறது. எனவே அமைதிக்கான நோபல் பரிசு தந்தது தகும்.

ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்க்கும் போது ஓரினப்பயிர், இரசாயன விவசாயத்தை அறிமுகப்படுத்தி பாரம்பரிய விவசாயத்தை பின்னடைய செய்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை கேள்விக்குறியாக்கியது உண்மைதான் என்பதை நமது நாட்டிலேயே தொடர்ந்து அங்கக பொருள் கடைகள் தோன்றுவதும், அங்கக வேளாண்மை குறித்து விவசாய அன்பர்கள் ஆர்வம் காட்டுவதும் உறுதி செய்யும்.

தனது கண்டுபிடிப்பால் கோடிக் கணக்கான மக்களை பசியிலிருந்து காப்பாற்றினர் என்பதும், இறுதி வரை பஞ்சத்தை எதிர்த்துப் போராடினர் என்பதும் உண்மை. மெக்சிகோ, இந்தியா. பாகிஸ்தான் போன்ற நாடுகள் இவரது உதவியால் கோதுமையில் அதிக மகசூல் பெற்றன என்பதற்கு கீழேயுள்ள வரைபடம் சான்று. இதனால் சமூக/பொருளாதாரம் நெருக்கடி தவிர்க்கப்பட்டது. நாணயத்தின் இரு பக்கத்தில் நாம் எந்த பக்கத்தை பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து கருத்துக்கள் இருக்கும் எனவே கருத்துக்களை உங்களிடம் விட்டுவிடுகிறேன்.

No comments: