Monday, December 7, 2009

கோப்பன்ஹேகன் பருவநிலை மாநாடு - 2009

இன்று 07-12-09 முதல் 18-12-09 முடிய பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய உலகளாவிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் உலகப் பருவ நிலை மாநாடு துவங்கவுள்ளது. ஏழை மற்றும் வளரும் நாடுகளின் மக்கள் பசியின்றி, பணியின்றி வாழ வளர்ந்த நாடுகள் உதவி புரியவும் வரும் ஆண்டுகள் பிரச்சனைகள் குறைந்த ஆண்டுகளாக மாறத் தக்க வகையில் மாநாட்டில் நல்ல முடிவுகள் எடுக்கப்பட இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.

பொருத்தமான இடத்தில் (டென்மார்க் நாட்டில்) நடைபெறுவதால் இம்மாநாடு சிறப்பு பெறுகிறது. எனது பழைய பதிவு சற்று விளக்கம் தரும்.

டென்மார்க்கை முன்மாதிரி நாடாக ஏற்றுக் கொள்வோமா ?????

மழை இன்மையால் வறட்சி, புயல் மழையால் வெள்ளம் நிலசரிவு, சுனாமி, பூகம்பம், நிலத்தடி நீர்வற்றுதல், பனி உருகுதல், கடல் மட்டம் உயர்தல் என இயற்கை தன் செயல்பாடுகளில் ஈடுபட மனிதன் உருவாக்கும் இயற்கைக்கு எதிரான செயல்களே காரணம். அவன் மனநிலையும் கவலை அளிப்பதாகவே உள்ளது. அதனைப் பற்றி காண :-

புவி வெப்பம் குறித்து இன்றைய மனிதனின் அலட்சிய மனநிலை

நமது ஆஸ்தியை நாம் சட்டப்படி பெற்றுக் கொள்வதாக நினைக்கிறாம் உண்மையில் நாம் அதனை நம் குழந்தைகளிடமிருந்து கடனாக பெற்றிருக்கிறோம். என்பதை நினைவில் கொண்டு இப்பூவுலகை பசுமையாக்கி வளமுள்ளதாக மாற்றி நம் குழந்தைகளுக்கு அளிப்போம்.

தனி மனிதனாக, குடும்பமாக நம்மால் முடியும் சில எளிய காரியங்கள் புவிவெப்பம் குறைய உதவும்.

புவி வெப்பத்திற்கெதிராய் நம்மால் முடிகின்ற 20 செயல்கள்

No comments: