Friday, October 29, 2010

அழகு தோட்டம் அமைக்க ஒரு நாள் பயிற்சி.

நகரங்களில் நிலபகுதியை தாவரங்களுடன் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு எழிலூட்டி இயற்கையை மனிதனின் இரசனைகேற்ப உருவாக்கி கொஞ்சம் சுற்றுச்சுழலை காப்பாற்றும் கலை (Landscape Gardening.). இன்று மிக பிரபலமாகி வரும் கலை. மிக எளிதாகவும் பொருளீட்ட உதவுகிறது. இதற்கான ஒருநாள் பயிற்சியை சென்னையில் நடத்துகிறார்கள்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி.

பேராசிரியர் மற்றும் தலைவர்
நகர்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை - 600 040

தொலைபேசி : 044 - 2626 3484,  044 - 42170506


இதில் சில ஆச்சரியங்களையும் அனுபவித்திருக்கிறேன். இந்து நாளிதழில் “ஸாமியா” என்ற பெரிதாக வளர்ந்த செடி ரூ1000/= என்று படித்தேன்.
நாட்டில் இவ்வளவு விலை கொடுத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்களா என்ற எண்ணம். சென்ற வருடம் கேரளா சென்றிருந்த போது அதனையும் முறியடித்தது மிக சிறிய “அக்லோனிமா” என்ற செடி. ரூ.5000/= என்ற விலையுடன் விற்பனைக்கு இருந்தது.

இந்தியாவில் தான் இருக்கிறோமா ? என்று எண்ணினேன். உங்களுக்கும் என் எண்ணம் போன்று தோன்றிருக்கும். எனவே இந்த எழிலூட்டும் கலை ஆச்சரியங்கள் நிறைந்த துறை.

Tuesday, October 26, 2010

வீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் காலத்தின் தேவை.

வீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் காலத்தின் தேவை.

வீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் இன்றைய காலத்தின் தேவை என்பதால், பல்வேறு காரணங்களுக்காக அனைத்து நாடுகளிலும் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக நகரப்புறங்களில் இதன் உபயோகம் அதிகம் என்பதால் சிறு அறிமுகம்.

Saturday, October 23, 2010

மாடித் தோட்டம் அமைக்க ஒருநாள் பயிற்சி.

உலகின் பல நாடுகளிலும் “நகர விவசாயம்” பல்வேறு காரணங்களுக்காக பிரபலமாகி வருகிறது. மிக சிறத்த இந்த பொழுதுபோக்கை (Hobby) முனைப்புடன் செய்தால் உடல் ஆரோக்கியமடைவதுடன் தொழிலாக மாற்றி வருவாயையும் ஈட்டமுடியும். அதற்கான ஒருநாள் பயிற்சியை சென்னையில் நடத்துகிறார்கள். முதியோர், வீட்டிலிருப்போர், மாணவர்கள், தாவரங்களை விரும்பி வளர்ப்போர், இளவயதினர் மற்றும் சுய உதவிகுழுவினருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வோம். வடகிழக்கு பருவமழை துவங்கப் போகும் நேரத்தில் பயிற்சி கிடைப்பதால் உடனே செயல்பட முடியும்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :

பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484

Sunday, October 17, 2010

மாடியில் முள்ளங்கி வளர்ப்பு

அறுவடைக்குப் பின்.
முள்ளங்கி
தாவரவியல் பெயர்: Raphanus sativus

மிக எளிமையாக வளரக் கூடிய தாவரம். உலகம் முழுவதும் இதற்கு வரவேற்பு உண்டு. கிழங்கு மற்றும் இலை ( கீரை ) உணவாகப் பயன்படுகிறது. நிறம், உருவ அமைப்பு போன்றவைகளால் வகைபடுத்தப்படுகிறது. சிறந்த மருத்துவ தன்மை வாய்ந்தது ஆனால் இதிலிருந்து வரும் மணம் காரணமாக மக்கள் விரும்பி உண்பதில்லை.
அறுவடைக்குத் தயார்

இந்த வெள்ளை முள்ளங்கியை மாடித் தோட்டத்தில் மிக நன்றாக வளர்க்க முடியும். நல்ல சூரிய ஒளியும் இலை மக்கும் அதிகமாக இருந்தால் வளர்ச்சியும் எடையும் சிறப்பாக உள்ளது. அறுவடை காலமும் குறைகிறது. பொதுவாக 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் அறுவடையை முடித்து விடலாம். எனது முதல் அறுவடையை புகைபடங்களாக உங்கள் பார்வைக்கு.

Friday, October 15, 2010

இன்று உலக கை கழுவும் நாள். கை கழுவும் நிகழ்ச்சி சென்னை கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை
பதினைந்தாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் கை கழுவிய நிகழ்ச்சி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சுகாதாரமாக கைகளைக் கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி, "உலக கை கழுவும் நாளாக' கடைபிடிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் சிறு கரண்டி மற்றும் முள் கரண்டிகளை உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் 90 சதவீதம் மக்கள் உணவு உண்பதற்கு கைகளையே பயன்படுத்துகின்றனர். கைகள் சுத்தமில்லாமல் இருந்தால், குழந்தைகளுக்கு வயிற்றுநோய், சுகாதாரத் தொற்று ஏற்படுகிறது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையில் இருந்து வந்த பிறகும் சோப்பு போட்டு கை கழுவுதல் மிகவும் அவசியம்.

சிறந்த கை கழுவும் முறை
இதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை 25 சதவீதம் கட்டுப்படுத்த முடியும். உலகத்தில் 15 லட்சம் குழந்தைகள் வயிற்று நோயால் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் கை சுத்தம் இல்லாதது தான். இதனடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 15 ஆயிரத்து 115 மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் கை கழுவும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சி "கின்னஸ்' சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்று சுப்புராஜ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Source : www.ikmahal.com/

Monday, October 11, 2010

பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன் அவர்களுக்கு மேலும் இரு விருதுகள்.


தமிழக அரசின் விருது பெறும் திரு. யோகநாதன்
   ஈகோ வாரியார் (Eco Warrior ) விருதினைத் தொடர்ந்து மேலும் இரு விருதுகள் திரு. யோகநாதன் அவர்களுக்கு சென்ற மாதம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் “சுற்றுச்சுழல் செயல் வீரர் ” விருதும் டிம்பர்லேன்ட் ஷூ கம்பெனி இந்தியாவில் தங்களது கடையை ஆரம்பித்த போது சுற்றுச்சுழலுக்கு தங்களை அர்பணித்துக் கொண்ட ஐவரை தெரிந்தெடுத்து UNSUNG HEROES என்ற விருதினை வழங்கி கௌரவப்படுத்தியது.
"Unsung Heros" விருது பெறும் திரு. யோகநாதன்

திரு. ஜான் ஆப்ரகாம் மற்றும் விருந்தினர்களுடன் 

விருது பெற்றவர்களுடன் திரு. ஜான் ஆப்ரகாம் மற்றும் திரு. மைக் பாண்டே
அந்த ஐவரில் ஒருவர் திரு. M.Y. யோகநாதன் என்பது நமக்குப் பெருமை. கிடைக்கின்ற ஓய்வு நேரத்தைக் கூட சுற்றுச்சுழலுக்கு அர்ப்பணிக்கும் இவரை மேலும் பல உயர்ந்த விருதுகள் வந்தடையவும் விருதினைப் பெற்ற அனைவரையும் இவ்வலைப் பூ உங்கள் சார்பாக வாழ்த்துகிறது.

இவரைப் பற்றிய எனது  பழைய பதிவு

பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன்

திரு.M.Y.யோகநாதன் அலைபேசி எண்
94430 91398

Sunday, October 3, 2010

அக்ரி இன்டெக்ஸ் 2010

டால்பின் வடிவில் மலர் அலங்காரம்
இந்த வருடம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் அரங்குகள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அதிக தகவல்களோடு இருந்தது. கருத்தரங்கம் நடைபெற்ற இடமும் அரங்குகளுக்கு மத்தியில் இருந்தது சிறப்பு. இந்திய வேளாண்மை வேலையாட்கள் சார்ந்து இல்லாமல் இயந்திரம் சார்ந்து மாறிக் கொண்டிருப்பதை தனியார் அரங்குகளில் காண முடிந்தது. இது நாட்டின் வளர்ந்து வரும் விவசாய வேலையாட்கள் பற்றாக் குறைக்கு தீர்வா ? அல்லது பிரதமர் கருத்துப் போல    நாம் வறுமையிலிருந்து தலைநிமிர்ந்து இருக்க ஓரே வழி அதிக ஆட்களை விவசாயத்தை விட்டு வெளியேற்றுவதுதான் (The only way we can raise our heads above poverty is for more people to be taken out of Agriculture )  என்று எண்ணுமளவிற்கு இராட்சத வேளாண்மை இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இயந்திரம்
இவ்வியந்திரங்கள் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் சிறு,குறு விவசாயிகளுக்கு நிச்சயம் பயனளிக்கப் போவதில்லை. பின் எதற்கு இந்த இயந்திரங்கள் நாட்டில் நடக்கும் நிலபேரங்களைப் பார்க்கும் இது மிகப் பெரிய நிலபிரபுக்களுக்கும், கம்பெனி விவசாயத்திற்கும் வித்திடுகிறது அதே சமயம் குறைந்து வரும் மழையளவு சிறு, குறு விவசாயிகளை வரும் ஆண்டுகளில் விவசாயத்திலிருந்து வெளியேற்ற உதவும் என்று தோன்றுகிறது. ஆனால் சில நல்ல விஷயங்களும் இருந்தன.
ஹைட்ரோபோனிக்ஸ் - காய்கறி வளர்ப்பு
எளிய நகர விவசாயத்திற்கு உதவும் ஹைட்ரோபோனிக்ஸ் என்னும் மண்ணில்லா விவசாயத்திற்கு அதன் மாதிரி அமைப்புக்களை வைத்திருந்தனர்.
ஹைட்ரோபோனிக்ஸ் - தீவன வளர்ப்பு

இதே முறையில் தீவன வளர்ப்பும் உண்டு என்று கூறி விரைவில் நம் நாட்டிலும் கிடைக்கும் என்றார்கள்.
சோலார் விளக்குப் பொறி
சோலார் விளக்கின் மூலம் பூச்சிகளுக்கு பொறி அமைப்பு நேர்த்தியாக இருந்துது. விலையும் சுற்று அதிகம் தான். இதனால் அவற்றை ‘திருட்டு’ காரணமாக நடைமுறையில் உபயோகபடுத்த முடியும் என்று தோன்றவில்லை. கொட்டில் வளர்ப்பு முறையில் ஆடு, பன்றி, கோழிவளர்ப்பிற்கு தேவையான தரைஅமைப்பு (Floor) நடைமுறையில் சிறப்பாக உபயோகப்படுத்த முடியும் என்று தோன்றியது.
உயரமான தரைஅமைப்பு (Floor)
எளிதாக கழிவுகள் கீழே விழவும் கழுவி விடுவதற்கு எளிமையாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். அமைப்பதும் பராமரிப்பதும் சுலபம்.இயற்கையிடு பொருட்கள் நிறைய இருந்தது. வண்ணமலர், காய்கனி அலங்காரங்கள் நேர்த்தியாக இருந்துது.
காய்கறியில் அலங்காரம்
பெருகி வரும் மக்கள் தொகை, குறைந்து வரும் மழையளவு, நகரத்தை நோக்கிச் செல்லும் கிராம மக்கள், சுருங்கி வரும் விளைநிலங்கள், மாறிவரும் உணவுப் பழக்கம், அதிக பலன் தரும் புதிய யுக்திகள், இயந்திரமயம் என இந்திய விவசாயம் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

Friday, October 1, 2010

பொன் முட்டையிடும் வாத்து.

பொன் முட்டையிடும் வாத்தை பேராசையால் அறுத்து கொன்ற கதையை இளவயதில் படித்திருக்கிறோம். அதற்கும் “டோங்க்ரியா கோண்ட்” பழங்குடியினர் தெய்வமாய் வணங்கும் நியமகிரி மலையை விழுங்கத் துடிக்கும் வேதாந்தா பாக்ஸைட் சுரங்க நிறுவனத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.


ஒருபுறம் காடுகள் 33% இருக்கவேண்டும் என்று கூறிக் கொண்டே மறுபுறம் இன்றைய பொருளாதார கொள்கைகளின்படி நடக்கும் அரசு எந்திரங்கள். அடுத்த உலகப் போர் “தண்ணீருக்காக” இருக்கும் என்று கூறிக் கொண்டே காடுகளை அழித்து மழையின்றி போவதற்கும், மழைவந்தால் வெள்ளபெருக்கு ஏற்படவும் பன்னாட்டு நிறுவனங்கள், வல்லரசுகள், பெரிய நிதி நிறுவனங்கள் செயலாற்றுவதும் அதனை “பொருளாதார வளர்ச்சி ” என்று திரு.பொதுஜனத்தை நம்ப வைப்பதும், அவர்களும் நம்பி ஏமாற்றமடைந்ததும் எல்லா நாடுகளிலும் நிகழ்த்தியிருப்பதும் வரலாறு. இந்த நூலை படியுங்கள்.

“ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்”-- திரு. ஜான் பெர்கின்ஸ்.

அரசு இந்த முறை வேதாந்தா பாக்ஸைட் சுரங்க நிறுவனத்திற்கு அனுமதி மறுத்ததை இன்னும் கூட நம்பமுடியவில்லை. அடர்த்தி நிறைந்து மழைப் பொழிவைத் தரும் அந்த மலைக்கும் அதன் பூர்வக்குடிகளுக்கும் தற்சமயம் பிரச்னை இல்லை என்பது மனநிறைவைத் தருகிறது. இந்த அனுமதி மறுப்பு நிரந்தரமாக இருக்க வேண்டுமானல் பள்ளிக் குழந்தைகளுக்கு காடுகளின் அவசியத்தையும் பூர்வக்குடிகளின் வாழ்கை முறையையும் புரிய வைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

11 நிமிட படத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்

I can’t be told by anyone how to live. If  I said to The Minister "Move from your Home" he would think I was mad. Bushman : Botswana