Friday, October 1, 2010

பொன் முட்டையிடும் வாத்து.

பொன் முட்டையிடும் வாத்தை பேராசையால் அறுத்து கொன்ற கதையை இளவயதில் படித்திருக்கிறோம். அதற்கும் “டோங்க்ரியா கோண்ட்” பழங்குடியினர் தெய்வமாய் வணங்கும் நியமகிரி மலையை விழுங்கத் துடிக்கும் வேதாந்தா பாக்ஸைட் சுரங்க நிறுவனத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.


ஒருபுறம் காடுகள் 33% இருக்கவேண்டும் என்று கூறிக் கொண்டே மறுபுறம் இன்றைய பொருளாதார கொள்கைகளின்படி நடக்கும் அரசு எந்திரங்கள். அடுத்த உலகப் போர் “தண்ணீருக்காக” இருக்கும் என்று கூறிக் கொண்டே காடுகளை அழித்து மழையின்றி போவதற்கும், மழைவந்தால் வெள்ளபெருக்கு ஏற்படவும் பன்னாட்டு நிறுவனங்கள், வல்லரசுகள், பெரிய நிதி நிறுவனங்கள் செயலாற்றுவதும் அதனை “பொருளாதார வளர்ச்சி ” என்று திரு.பொதுஜனத்தை நம்ப வைப்பதும், அவர்களும் நம்பி ஏமாற்றமடைந்ததும் எல்லா நாடுகளிலும் நிகழ்த்தியிருப்பதும் வரலாறு. இந்த நூலை படியுங்கள்.

“ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்”-- திரு. ஜான் பெர்கின்ஸ்.

அரசு இந்த முறை வேதாந்தா பாக்ஸைட் சுரங்க நிறுவனத்திற்கு அனுமதி மறுத்ததை இன்னும் கூட நம்பமுடியவில்லை. அடர்த்தி நிறைந்து மழைப் பொழிவைத் தரும் அந்த மலைக்கும் அதன் பூர்வக்குடிகளுக்கும் தற்சமயம் பிரச்னை இல்லை என்பது மனநிறைவைத் தருகிறது. இந்த அனுமதி மறுப்பு நிரந்தரமாக இருக்க வேண்டுமானல் பள்ளிக் குழந்தைகளுக்கு காடுகளின் அவசியத்தையும் பூர்வக்குடிகளின் வாழ்கை முறையையும் புரிய வைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

11 நிமிட படத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்

I can’t be told by anyone how to live. If  I said to The Minister "Move from your Home" he would think I was mad. Bushman : Botswana

No comments: