Wednesday, December 1, 2010

ஆகாயத் தாமரை( EICCHORNIA CRASSIPES)

ஆகாயத் தாமரை
பிரேசில் நாட்டைத் தாயகமாகக் கொண்ட ஆகாயத் தாமரை இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அழகிற்காக மேற்கு வங்கத்தில் கொண்டுவரப்பட்டு இன்று நாடெங்கிலும் குளம், குட்டைகளில் பரவி அழிக்கமுடியாத தாவரமாக மாறி விட்டது. கோடைகாலங்களில் நீர் நிலைகளில் இலைவழியாக ஆவியாதலை அதிகப்படுத்துகிறது. விவசாயதிற்கான நீரை அசுத்தமாக்குவதோடு நீர் செல்லும் வழிகளில் பரவி தடை ஏற்படுத்துகிறது. இதனால் உள்நாட்டு மீன் உற்பத்தி குறைந்து போனதாலும் குறைந்த நீரின் அளவாலும் காய்கறிகளின் உற்பத்தி மற்றும் விலையை பாதிக்கிறது. நீர் வழி போக்குவரத்தை பாதிப்பதோடு சுற்றுலாத் தலங்களின் அழகையும் படகு சவாரி போன்ற நல்ல பொழுதுபோக்கையும் கேள்வி குறியாக்கிவிட்டது(உ .தா. ஊட்டி, படகு சவாரி ). நகரப்புறங்களில் கொசுத் தொல்லையையும் உண்டாக்குகிறது.
ஒரு செடி சுமார் 5000 விதைகள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. முளைப்புத் திறன் 20 ஆண்டுகள். இதனை உயிரியல் முறையில் கட்டுபட்டுப்படுத்த வெளி நாட்டிலிருந்து ஒரு வண்டினத்தை ( Neochetina spp.) நம் நாட்டில் வெற்றிகராமாக உபயோகித்து அழிக்க ஆரம்பித்துள்ளனர் அதுபற்றிய செய்தியைக் காண கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள். உங்கள் பகுதியிலும் இதனை உபயோகிக்க முயலுங்கள்.

http://www.nrcws.org/Story6.pdf


ஆகாயத் தாமரை கொண்டு செய்த சோபாசெட்டுக்கள்
 இதனால் நன்மை என்று பார்த்தால் மண்புழு உரம் தயாரிக்கலாம். அழகிய அமரும் சோபாசெட்டுகளையும் கைவினைப் பொருட்களையும் கீழைநாடுகளில் செய்கிறார்கள். அவைகள் நம் நாட்டிலும் கிடைக்கின்றது.

முக்கியமாக நமது தேசீய மலரான தாமரை மலரையும், தாமரைகுளங்களையும் வெகுவாக பாதித்து நிறைய இடங்களில் இல்லாமலும் செய்துவிட்டது. வரும் சந்ததியினர் தாமரை மலரையும், தாமரைகுளங்களையும் புகைபடங்களில் பார்க்குமளவிற்கு இது பரவி விட்டது. ஜீவராசிகளின் அடிப்படை ஆதாரமான நீராதாரத்தை இது வெகுவாக பாதிப்பதாலும் பயன்களைவிட பாதிப்புகள் அதிகமிருப்பதால் அழிக்கப்பட வேண்டிய தாவரம்.

No comments: