Tuesday, March 22, 2011

உலக நீர் நாள்


ஓவ்வொரு வருடமும் ஒரு குறிகோளுடன் கொண்டாடப்படும் உலக நீர் நாள் இந்த வருடம் நகரங்களுக்குக்காக தண்ணீர் என்ற குறிகோளுடன்  கொண்டாடப்படுகிறது.

குறைந்து வரும் மழை அளவு, பெருகி வரும் மக்கள் தொகை, உலகமயம், தாராளமயத்தில் கொள்ளைபோகும் விவசாய நிலங்கள் விவேகமில்லாத விஞ்ஞான வளர்ச்சி, பன்னாட்டு கம்பெனிகளின் பிடியில் பொருளாதாரம், சுற்றுசுழல், மற்றும் விவசாயம், போன்ற காரணங்களால் கிராமங்களிலிருந்து குடிபெயரும் மக்கள் அதிக வேலை வாய்ப்புகள் தரும் நகரங்களை நோக்கி வரும் அவலநிலை எல்லா வளர்ந்து வரும் நாடுகளிலும் ஏற்பட்டு வருகிறது.

இந்த இடமாற்றம் நகரங்களின் சுற்றுச்சுழலையும், தண்ணீர் தட்டுபாட்டையும்  பெருமளவு ஏற்படுத்துகிறது. அதற்கான தீர்வுகள் நம் கையில்தான் உள்ளது. மழையை தருவிக்க பெருமளவில் மரங்களை நடுதல், மழை நீர் சேமிப்பு, சேமித்த நீரை குறைவாக உபயோகித்தல், மறுஉபயோகம், மறுசுழற்சி ( 3R  Reduce, Reuse, and Recycle) என்ற கொள்கையை கடைபிடித்து உபயோகித்தால் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கமுடியும். தொழிற்சாலை கழிவுகள் பெருமளவு நீராதாரங்களில் விடப்படுகிறது. வேலைவாய்ப்பை பாதிக்காதபடி இதற்கு முடிவு காணவேண்டும் இல்லையேல் அடுத்த வரும் பத்தாண்டுகள் ????? ஆண்டுகளாக இருக்கும்.

No comments: