Wednesday, April 27, 2011

அச்சம் தரும் அணு உலைகள் -- (2)




சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாய்ச்சி  6 அணு உலைகளின் மூலம் பெறப்பட்ட மின்சக்தியை (10 GW ) காட்டிலும் ஜெர்மனி நாட்டில் சூரிய சக்தியின் மூலம் பெறப்படும் மின்சக்தியின் அளவு (12.1 GW ) அதிகம்.

மேலும் படிக்க :-

நம் நாட்டைக் காட்டிலும் ஜெர்மனி நாட்டில்  இயற்கை தரும் சூரிய ஒளி குறைவு. ஆனால் அவர்கள் பழைய 7 அணு உலைகளை மூடிவிட்டு சூரிய சக்தியின் மூலம் பெறப்படும் மின்சக்தியில் கவனம் செலுத்துகின்றனர். நாம் அதனை விடுத்து அணு மின்சாரத்தில் கவனம் செலுத்துகிறோம். அணு மின்சாரத்தை நமது அரசுகள் நம் மீது திணிக்கின்றனர். பாராளுமன்றத்தில் ஆதரவு பெற பணம் கொடுக்கப்பட்டதாக அமளி ஏற்ட்டது நினைவிருக்கலாம். ஃபுகுஷிமா கதிர் வீச்சிலிருந்து இன்னும் முழுமையாக  உலகம் விடுபடாத நிலையில், செர்னோபில் பாதிப்பு தின 25 ஆண்டு அன்று ஜைதாப்பூர் அணு உற்பத்திக்கு அரசு பச்சைக் கொடி காட்டுகிறது என்றால் மக்கள் அரசு என கூற தயக்கமாக உள்ளது.

 சிறந்த பொருளாதார மேதையும், எளிமையுமுடைய நமது மதிப்பிற்குரிய பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களும் அதற்காக பரிந்து பேசுவது வருத்தம் தருவதாக உள்ளது. இந்தியாவின் எதிர்கால சுற்றுச்சுழல் ??????????? 

 மேலும் படிக்க :-

No comments: