Thursday, June 7, 2012

நேபாளத்தில் வெட்டிவேர் - ஒரு பார்வை


இமயமலைத் தொடரில் அமைந்த மலைகள் நிறைந்த நாடு நேபாளம். இயற்கை அன்னை தன் அழகை அள்ளி தெளித்த நாடு. பனிப்பாறைகள், மேடுபள்ளங்கள்,காடுகள் நிறைந்த நாடு. இதுபோன்ற நாடுகளின் சுற்றுச்சுழலில் மழை பெறுவதற்கும், மண் அரிப்பை கட்டுப்படுத்தி மண் வளத்தையும் நீர் வளத்தையும் காப்பாற்றி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில்  காடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் தற்போதைய பொருளாதாரம்  இயற்கை வளங்களை அழித்துத்தான் மக்கள் மேம்பாடு என்று ஆன பின்பு காடுகள் அழிக்கப்படுகின்றன. விளைவு மழையளவு குறைந்து  மண் அரிப்பு ஏற்பட்டு உயிரின வளம் குறைந்து கிராம மக்களின் வாழ்வாதாரம்  கேள்விக் குறியாகிறது. அதனை மாற்றும் முயற்சியில் நேபாள வெட்டிவேர் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து நேபாள் வெட்டிவேர் நெட்ஒர்க் என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல் திட்டங்கள் வகுத்து செயலாற்றி வருகின்றனர். அவர்கள் "சிந்துபால்சௌக்" என்ற நீர்வழிப்பாதையை மண்சரிவிலிருந்து காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சியை புகைப் படமாய் உங்கள் பார்வைக்கு.

Source :Sri.Ramjee shrestha Secretary
Nepal Vetiver Network (NPVN)

No comments: